Wednesday, July 9, 2008

டிபிசிடியின் காத்திருந்த காதலி - 6

பழைய காதலிகளின் தொகுப்பு :

வடகரை வேலனின் - காத்திருந்த காதலி - 1
பரிசல்காரனின் - காத்திருந்த காதலி - 2
வெய்யிலானின் - காத்திருந்த காதலி - 3
கிரியின் - காத்திருந்த காதலி - 4
ஜெகதீசனின் - காத்திருந்த காதலி - 5

ஃஃஃஃஃஃஃஃ

எங்கெங்கோ சுற்றித் திரிந்த கதையயை, ஒரு விபத்தில் கார்த்திக்கின் தாய், தந்தையயை சாகடித்து, ஒரு அருமையான திரைக்கதை வித்தகர் என்று நிருபித்திருக்கும் ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.

ஃஃஃஃஃஃஃஃ

கெளரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்..

சொல்டா... சங்கருக்கு எப்படி இருக்கு? ரெம்ப கிரிட்டிக்கலா? எப்ப நினைவு திரும்பும்?

ம்ம்ம்...உள்ள வாடா சொல்றேன்....



இனி........

வேலை செய்வதைப் போல் நடித்துக் கொண்டியிருந்த, செவிலியயை, உள்ளே நுழையும் போதே, பார்வையில் வெளியேறச் சொல்லிக் கொண்டே தனது இருக்கையில் அமர்ந்தார், இருதயராஜ்.
"உட்காருடா" என்று கெளரியின் தந்தையான ராமச்சந்திரனை பணித்தார் இருதயராஜ்.
சொல்ல வந்ததை பட்டென்று நோயாளிகளிடமே சொல்லிவிடும், இருதயராஜ், ராமசந்திரனிடம் சொல்லத் தயங்கினார். அது அவருடைய மகள் சம்பந்தப்பட்டது என்றக் காரணம் மட்டுமல்லாமல், தனது இயலாமை என்பதாலும் தயங்கினார்.
ஒருவாறாக தனது மனதை நிலைநிறுத்தி, ராமச்சந்திரனிடம் சொல்ல ஆரம்பித்தார்..இருதயராஜ்.
கேட்க கேட்க, அப்படியே உறைந்தப் போனார் ராமச்சந்திரன்.
ஃஃஃஃஃஃஃ
சங்கரின் நிலைக்குறித்து தனது தந்தையாரிடம் சொல்லலாம் என்று அலுவலகம் வந்த கெளரி தந்தையார், மருத்துவமணை போயிருப்பதை அறிந்து, தனது வண்டியயை மீண்டும் மருத்துவமணைக்கு திருப்பினாள்.

மருத்துவமணைக்கு போகும் வழியில் எல்லாம்,அவளுக்கு பல நினைவுகள்..ஆனால், அந்த நினைவுகளின் ஊடே, அவளுக்கு இடைவிடாது ஒரு சந்தேகம் ஒலித்துக் கொண்டே வந்தது. சங்கரின் உடல் நிலைக்குறித்து, உறுதியான ஒரு தகவல் வரும் வரை அவள் நிம்மதியயை இழந்து தவிக்கப் போவது உறுதி என்பதை அவளின் அமைதியின்மை பறை சாட்டியது.

மருத்துவமணையின் உள் நுழையும் போது, "உயிர் நண்பன் மருத்துவமணையில் இருக்கும் பொழுது கார்த்திக் ஏன் இப்படி திடிரென்று போய் விட்டான்" என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.

ஃஃஃஃஃஃஃஃ

"அப்படின்னா இனிமே..." என்று ராமச்சந்திரன் இழுக்கவும், கெளரி, இருதயராஜ் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

ஏதோ தீவிரமான உரையாடல் நடந்துக்கொண்டியிருப்பதை உணர்ந்த கெளரி, சங்கர் குறிந்து இருக்கும்மோ என்று பதட்டத்துடன் "என்னப்பா இனிமே ,....? என்ன இனிமே...? சொல்லுங்கப்பா, சங்கருக்கு என்னப்பா ஆச்சு....என் கிட்டே மறைக்காதீங்கப்பா" என்று தந்தையின் சட்டையயை உலுக்கத் தொடங்கினாள்.

மகளை எளிதில் சமாதானம் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ராமச்சந்திரன், "இல்லம்மா, இது சங்கர் பற்றியது இல்லையம்மா..."..

எனக்கு இரத்தப் பரிசோதனை எடுக்கச் சொல்லியிருந்தாங்க...எனக்கு சர்க்கரை இருக்காம்மா, அதனாலே, இனிமே இனிப்பு சாப்பிடக்ககூடாதா என்று கேட்க இருந்தேன்..அதைப் போய் நீ தவறா நினைச்சிட்டியே.. என்று மிக நிதானமாக ராமச்சந்திரன் கூறினார்.

மகுடிக்கு மயங்கும் பாம்பு போல், தந்தையின் சொல்லைக் கேட்டு கெளரி, "ஓ அப்படியாப்பா, காமாலைக் கண்...கண்டதெல்லாம் மஞ்சாளாகத் தெரிகிறது." என்று தன்னை நொந்தபடி, தந்தையின் நலன் விசாரிக்க மறந்தேனே என்று மீண்டும் நொந்துக் கொண்டாள்.

"அப்பா, எப்படியப்பா உங்களுக்கு சர்க்கரை வந்தது..இனிமே உங்களுக்கு தேயிலை, வடிகொட்டை நீரில் இனிப்பு போடவே மாட்டேனப்பா" என்று மிரட்டினாள்.

"சரியம்மா..உன் விருப்படியே ஆகட்டும்" என்று சொல்ல வந்து விருப்பப்படியே என்றுச் சொல்லும் போது ராமச்சந்திரனுக்கு குரல் கமறியது. அதற்குள்..

"சங்கரை ஒரு முறை நான் வெளியே இருந்து பார்க்கட்டுமா" என்று இருதயராஜை நோக்கி கேட்டாள் கெளரி.

இருதயராஜிற்கு இருதயமே நின்று விடும் போல் இருந்தது

ஃஃஃஃஃஃஃஃஃ.

இரயில் மேல் படுக்கையில் கண்களை மூடி ஆழ்ந்து உறக்கத்திலிருந்தான் கார்த்திக்.

மருத்துவமணையில் கெளரியயை சந்தித்ததை நினைவில் நிறூத்தி, அதில் கெளரி என்ன உடை உடுத்தியிருந்தாள் என்று யோசித்துக் கொண்டியிருந்தான்.

நண்பனின் காதலியயை நினைக்கிறாயே ...?என்று அவனுடைய மனசாட்சி ஈனமான குரலில் கேட்டப் பொழுது, அவன் காதலிக்கும் முன்பிருந்தே நான் காதலிக்கிறேன்..அவன் தான் என்னுடைய காதலை கவர்ந்துவிட்டான்.

சங்கர் உன்னை என்ன செய்தால் தகும்...என்று கனவில் உறுமினான்

அது தான் செஞ்சிட்டியே...இனிமே என்ன செய்யனும் என்று மீண்டும் மெதுவான குரலில் ஒலித்தது அவனுடைய மனசாட்சி...

இல்லை இல்லை..அது நான் வேண்டுமென்றே செய்யவில்லை....என்று தூக்கத்தில் அரற்றினான்..கார்த்திக்...

ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கண்களைத் திறக்க முயற்சி செய்தான் சங்கர்....யாரோ கைகளை கண்கள் மீது அழுத்தி மூடியதுப் போல் உணர்ந்தான்.

கை கால்களை அசைக்க முயற்சி செய்தான்...ஆனால் முடியவில்லை..

என்ன நடந்தது....என்று நினைவுக்கூற முயன்றான்....நெற்றியில் சம்மட்டியால் யாரோ அடிப்பதுப் போல் வலித்தது..

"கார்த்திக்....உன்னை கொல்லாமல் விட மாட்டேன்...."

ஃஃஃஃஃஃஃஃஃஃ

(காத்திருந்த காதலி யாருக்கு காத்திருந்தாள்...என்ற கேள்விக்கு விடை தெரிய யாரை அழைப்பது.....என்று யோசிக்கும் பொழுது..இந்தக் கதைக்கு பின்னுட்டபவர்களே ஆசிரியராக ஆகிக் கொண்டியிருப்பதை எண்ணிப் பார்த்து, நம்ம முத்தக்காவை அழைக்கிறேன்.........)

கதைக்கு என்னால் ஆன குழப்பங்களை சேர்த்துவிட்டியிருக்கேன்...கூடுதலாக ஒரே ஒரு விதி..குறைந்தப் பட்சம் 16 ஆசிரியர்கள் (பாகம்) ஆனப் பிறகே முற்றும் போட வேண்டும்.
ஃஃஃஃஃஃஃஃஃஃ

கதையயை மருத்துவமணை விட்டு டெல்லிக்கு இழுத்துச் செல்வாரா முத்தக்கா..வெகு விரைவில் இங்கே வெளியாகும்...காத்திருந்து படியுங்கள்..

Thursday, May 8, 2008

கத கேளு கத கேளு : பில்லா- லங்காவி -பினாங்க் கத கேளு :)

மே 2 3, 2008, லங்காவி, ஈகிள் பே விடுதி.

வழக்கமாக கிளம்ப தாமதம் செய்துக் கொண்டியிருக்கும் நான், மே2 ஆம் தேதி கோவியாரை
திகைக்க வைக்க எண்ணி, வெகு சீக்கிரமாக எழுந்து தயாராகிவிட்டேன். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இருவரும் பேசிக் கொண்டது 8.00 மணிக்கு விடுதியயை விட்டுக் கிளம்புவோம் என்பதே. நான் 7.30 மணிக்கு தயாராகி, கோவியார் அறையயை தட்டினால், தலைவர் எழுந்திருக்க கூட இல்லை. ஒரு சிறுவனுக்குரிய மகிழ்ச்சியுடன், அவரைக் கொஞ்சம் எள்ளி நகையாடிவிட்டு, உணவருந்துச் சென்றோம். பின், அறைக்கு திரும்பி, மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன்.

சற்று நேரம் கழித்து கோவியார், தயாராகி, உணவருந்திவிட்டு வந்தார். விடுதியில் அறையயை காலி செய்து விட்டு கிளம்பினோம்.பின்னர், அரும்பாடுபட்டு, அந்த பழைய வீரா காரைக் கிளப்பிக் கொண்டு வந்தேன். வண்டியயை எடுத்தவுடன் பார்த்தது, இரவு வேலை செய்த சமிக்ஞைக் காட்டும் கருவி வேலை செய்யவில்லை. சரி, லங்காவியின் வரைவும் தேவைப்பட்டதால்,படகு நிறுத்ததிற்குச் சென்று இரண்டையும் முடித்துவிடலாம் என்று சென்றோம். வாடகை வண்டிக்காரனை அழைத்தால், அவன் வந்து, வேறு வண்டிக் கொடுத்தால், எண்ணெய் (petrol) பணம் கொடுக்க மாட்டோம் என்றுச் சொல்லிவிட்டான். சரி,இதை சரி செய்ய முடியும்மா என்றால், திருப்பும் சக்கரத்தின் கீழ் கையயை விட்டு, ஒரு இழு இழுத்தான் சரியாகவிட்டது. சரி, என்று வரைவைப் பார்த்து, வண்டியயை ஓட்ட ஆரம்பித்தேன். கோவியார் நடத்துனராக முன்னே அமர வைத்தோம்.

தொங்கும் கம்பி வண்டிக்குப் (cable car) போவதாகத் தான் திட்டமிட்டுயிருந்தோம். வழியில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருந்தன. அந்த இடத்திற்கு ஊருக்குள் நுழைந்தப் போவதென்றால், குழம்பிவிடுவோம் என்றூ தீவைச் சுற்றி செல்லும் பாதை, நெரிசல் இல்லாத பாதையயைத் தேர்தெடுத்தோம். ஒவ்வோரு சின்னமாக அடையாளம் கண்டுப்பிடித்து, நிதானமாக, அதே சமயம் திட்டமிட்ட நேரத்திற்குள் வந்து சேர்ந்தோம். தொ.கம்பி வண்டியயைப் பார்க்கும் போதே ஆயசமாக இருந்தது. அனுமதிச் சீட்டைப் பெற்ற வரிசையில் நின்றோம்.

வண்டி நகர்ந்துக் கொண்டியிருக்கும் போதே, வண்டியினுளீருந்து, பயணிகள் இறங்கி, நாம் ஏற வேண்டும். அதனால், கட்டம் போட்டு, ஒவ்வொருவருக்கும் இடம் ஒதுக்கி, சீரான வேகத்தில் நகரும் வண்டியினுள் ஏற வைக்கப்படுகிறார்கள். முண்டியடிக்காமல், பொறுமையாக அனைவரும் ஏறியதைக் குறிப்பிட வேண்டும். கம்பி வண்டி மேல் நோக்கி நகர்ந்தது. மேலிருந்து கீழ் நோக்கி பார்த்தால் லங்காவியின் ஒரு பகுதி தெரிந்தது. இந்த தொ.கம்பி வண்டி கடற்கரையோரம் இருக்கும் ஒரு மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.

(தொங்கும் கம்பி வண்டி மேலிருந்து கீழ் )

ஒரிடத்தில் கம்பி செங்குத்தாக ஏறுவதைப் பார்த்து, அந்த இடத்தில் நமக்கு மிகவும் திகிலாக இருக்கும் என்று பேசிக் கொண்டே ஏறினோம். ஆனால் நாங்கள் நினைத்ததுப் போல் அல்லாமல், கம்பி செங்குத்தாகச் சென்றாலும், வண்டி, நேராகவே நகரும் வண்ணம்,வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது, அந்த இடத்தைக் கடக்கும் போது புரிந்தது.
(கம்பி வண்டி திரும்பும் இடம். மேலே தெரிவது தான் பார்வையாளர்கள் தளம். இடப்புறம் கீழே தெரிவது, அந்த தொங்கு பாலத்தின் ஆரம்பம். அந்த திரும்பும் இடத்திலிருந்து பாலத்திற்கு இறங்கிச் செல்ல வேண்டும் )

முதலில் 652.5 மீட்டர் உயரத்தில் இறங்கி, அங்கேச் சென்று, பார்வையாளர்கள் தளத்தில் நின்று பார்த்தோம். அங்கிருந்து பார்த்தால், பில்லா (அஜித்) ஒரு தொங்கு பாலத்திலிருந்து கிழே சர்ரென்று இறங்குவாரே, அந்த பாலம் தென்பட்டது.
( பில்லா பாலம் !!! காற்று அதிகம் அடித்தால் பாலம் அசையும்..அசைந்தப் போது ஆடிப்போய் விட்டோம்..)
தொங்கு பாலங்கள் ஓரளவிற்கு நேராக இருக்கும். இந்த பாலத்தைக் கட்டியவர்கள் ஏனோ, அதை ஒரு அரை வட்டம் போல் வைத்திருந்தார்கள். அதுவும் கீழிலே பிடிமானம் எதுவும் இல்லை, பாலம் கம்பிகளால் தொங்கவிடப்பட்டியிருந்தது.

(இந்த படியில் தான் அஜித் சர்ரென்று இறங்குவார்...கம்பிக்கு வெளியே கை நீட்டி, மாறுப்பட்ட கோணத்தில் எடுத்தேன்... :P )

பார்வையாளர்கள் தளத்திலிருந்து, கீழே சற்று தூரம் முரட்டுப் படிகளில் இறங்கி சென்றோம். அந்தப் பாலத்தை அருகே சென்று பாதளத்துடன் பார்த்தால் கொஞ்சம் உதறலாகத் தான் இருந்தது. அஜித் டூப் போடாமல் அங்கே சாகசம் செய்திருப்பாரா என்று சந்தேகமும் வந்தது. யார் அதை செய்திருந்தாலும் அது உண்மையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செய்யும் செயல் தான்.

சில, பல நிழற்படங்களை அள்ளிக் கொண்டு, பின், அந்த முரட்டுப் படிகளில் ஏறி, மலையுச்சியில் இருக்கும் பார்வையாளர்கள் தளத்திற்கு வண்டியில் ஏறினோம்.
(மலை, தீவு, திவுக்குள் மலை, மலையே தீவு, குட்டித் தீவு என்று தாவு தீரும் காட்சிகள்.. :)))) )

அந்த இடத்தில் இருந்துப் பார்த்தால், கடற்கரை, மலை, தீவுகள், பாதாளம் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு காட்சி. நிழற்படங்களில் பார்த்தாலும், அதை முழுமையாக அங்கே சென்றுப் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும்.

(கோவியார் எடுத்தப் படம்..விமர்சனங்கள் வரவேற்கப்படமாட்டாது )

சம்பிரதாய படப்பிடிப்பு வேலைகள் அங்கேயும் நடைப்பெற்றது. சற்று நேரம் கால் நீட்டி, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அந்த தளத்தின் உச்சியில் இருக்கும் தளத்திற்குச் சென்றோம் (இரண்டு அடுக்குகளாக கட்டியிருக்கிறார்கள்). அங்கே சற்று நேரம் செலவழித்தப் பின் மற்றொரு பார்வையாளர் தளத்திற்குச் சென்றோம்.

அதன் பின், சற்று சிற்றுண்டிகள் அருந்திவிட்டு, கீழே போகும் வண்டிக்கு ஆயுத்தமானோம். வண்டி கீழே இறங்கும் போது திகிலாகவே இருந்தது. கோவியார் பயந்ததாலோ என்னவோ, வண்டியயை ஆட்ட முயற்சிப்பதுப் போல் நடித்துக் கொண்டே வந்தார். மேலிருந்து கீழ் நோக்கி வருகையில் சில மான்கள் தென்பட்டது. வனவிலங்கு பூங்கா ஒன்றும் இருப்பது தெரிந்தது. கீழியிருந்து மேலே சென்று வருவதற்குள் 3 மணி நேரம் ஆகிவிட்டது. உணவருந்தும் நேரம் வேறு கடந்துவிட்டது. எங்கள் படகு கிளம்பும் நேரத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால், வேற இடத்திற்குச் செல்ல முடியாது என்பதால் நேரே உணவு விடுதிக்கு வண்டியயை விட்டோம். நேற்று உணவருந்திய இடமென்றால் பரவாயில்லை என்று ஒருப் புறம் நினைத்தாலும், சாப்பிட ஏதாவது கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட்ட நேரத்தில், சரியாக அதே உணவு விடுதியயைக் கண்டுப்பிடித்து, உணவருந்தினோம். பின்னர் அருகேயிருந்த பேரங்காடியில் மிட்டாய்கள் கொள்வனவு செய்துவிட்டு, படகுத்துறைக்கு கிளம்பினோம்.

படகுத்துறையில் வண்டியயை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு, கழுகு சிலையுடன் சில நிழற்படங்கள் எடுத்துவிட்டு, சுங்க சோதனையயைக் கடந்து, காத்திருப்பு அறைக்கு வந்தோம். 5.00 மணிக்கு படகில் ஏற அனுமதிக்கப்பட்டவுடன், வரிசையில் நின்று ஏறினோம். வரும் போது, கீழ் தளத்தில் ஆட்டம் அதிகமாக இருந்ததால், சிலர் வாந்தி எடுக்க நேரிட்டது. அதனால், இம்முறை மேல் தளத்தில் சென்று விடுவோம் என்று முதல் தர அறை பக்கம் படக்கென்று ஏறிவிட்டோம். சில பல தகிடுதத்தனம் செய்து முதல் தர அறையிலே இடம் பிடித்தோம். படகு போக ஆரம்பித்த பத்து, இருபது நிமிடத்திலேயே, பார்வையாளர்கள் முகப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர்.சூரியன் தரையிறங்கும் காட்சியயைக் காண மக்கள் குவிந்த வண்ணமே இருந்தனர்.

( தலைகள் இல்லாமல் படம் எடுப்பது ரொம்ப கடினமாக இருந்தது..சூரியன் கீழே இறங்க ஆயுத்தமாகிவிட்டார்)
வண்டியில் ஏகப்பட்ட அரபியர்கள் தென்பட்டனர். மலேசியவிற்கு நிறைய சுற்றுலா பயணிகள் அரபு தேசத்திலிருந்து வருவதாக புள்ளியிலும் சொன்னது நினைவுக்கு வந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலே ஒரு சூடான் குழு இளைஞர்கள், இளைஞிகள் பாடல் பாடியபடி, வந்தார்கள்.

(சூடான் இளைஞர்கள். பின்னாலிருப்பது சூடானிய இளைஞி )
அவர்களைக் கண்டால், ஏதோ தெற்கே நம்மவர்களைக் கண்டதுப் போல் எனக்குத் தோன்றியது. உருவமைப்பில் திராவிடர்களுக்கு அருகே வந்ததுப் போல் தோன்றியது.

சூரியன் மறைய மறைய கை தன்னாலே, படம் எடுத்துத் தள்ளியது.
(மொக்கை முயற்சி என்று கூவுபவர்கள்...வாழ்க...)
நிச்சயம்,புகைப்பட ஆர்வலர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சந்தர்பம் கிடைக்குமேயானால், இதை விட நல்ல தரமான படங்கள் வந்திருக்கும் என்பது திண்ணம். என்னிடம் இருந்த எண்சமிக்ஞை (digital) நிழற்படக்கருவியில் கிடைத்த மட்டும் சுருட்டினேன்.

(சில்ஹவுட் முயற்சி...படத்தில் இருப்பது நானே தான்...)
சுமார், 8.30 மணியளவில் பினாங்க் வந்தடைந்தோம். பின்னர், வாடகை ஊர்தி அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். குழந்தைக்கு உணவுக் கொடுத்துவிட்டு, குருவி படத்திற்குச் செல்வதென்று ஏற்கனவே முடிவு கட்டியிருந்தப்படியால், வெளியே உணவு உண்டுவிட்டு, திரையரங்கிற்குச் சென்றோம். படம் போட 1 மணி நேரம் ஆகும் என்று தெரிந்தவுடன், அருகே இருந்த பணி பந்து உருட்டி விளையாடுமிடம் சென்று ஒரு ஆட்டம் ஆடி முடித்தோம்

கோவியார், நான், கோவியார் மகள் விளையாடியதில், நான் தான் வென்றேன் என்று இங்கே தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். என்னால் ஒரு முறைக் கூட பத்து புட்டிகளை வீழ்த்த முடியவில்லை. அதனால் என்ன, நானியிருக்கிறேன் என்று, எங்கள் அனைவரையும் ஒரே அடியில் குருவி வீழ்த்தினார், படம் பார்க்கும் பொழுது. நள்ளிரவு தொடங்கி , அதிகாலை வரை குருவியின் கொத்துப்புரோட்டாவில் சிக்கி சின்னா பின்னமாகி, தூங்கச் சென்றோம். மே3, காலை சிற்றுண்டியயை முடித்துவிட்டு, பேருந்து நிலையத்தில் கோவியாரை வழியணுப்பிவிட்டு, மீண்டும் ஒரு குட்டித் தூக்கத்துடன் பயணம் நிறைவு பெற்றது.

தொடர்புடைய பதிவுகள் :
பினாங்கில் பெண்டேரா மலைக்குப் போனது ( டிபிசிடி, கோவி) , பினாங்கிலிருந்து லங்காவிற்கு சென்றது.



என் பதிவில் ஓடைப் பிரச்சனையால் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. அது சரியாகும் வரை, இந்த வீட்டில் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறேன். :))

Wednesday, April 23, 2008

இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!!-

"டேய் முருகேசா, இந்த இடத்தை வாங்கலாம்டா." என்று முருகேசனின் அம்மா, மீனாட்சி கேட்டாள்.

"இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொடு" என்று முருகேசன் கேட்டான்.

"டேய், எது எல்லாம் விளையாடுறதுன்னு ஒரு அளவு இல்லையா." என்று அங்கலாய்த்தாள் மீனாட்சி அம்மாள்.

"அதெல்லாம் தெரியாது..இரண்டிலே ஒன்னைத் தொட்டா பதில். இல்லாட்டி, பதில் இல்லை. அவ்வளவு தான்" என்றுச் சொல்லிவிட்டு, கையயை நீட்டியவாறே, தொலைக்காட்சியில் ஆழ்ந்தான்.

"உன்னைய திருத்தவே முடியாது. சரி போ, இந்தா தொட்டுட்டேன் சொல்லுடா" என்று ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.

"அம்மா, அந்த இடத்தை வாங்கலாம்மா" என்று முருகேசன் சொல்லவும், அவன் அம்மா முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

இதை அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டியிருந்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த மாதிரி முக்கியமான முடிவுகளில் கூடவா, இப்படி விளையாடனும். சரி கேட்டே விடுவோம் என்று..

" ஏண்டா, முக்கியமான விவகாரங்களில் கூட இதை தான் நீ பின்பற்றனும்மா. இதை ஏன் நீ பிடிச்சித் தொங்கிட்டு இருக்கே. " என்றுக் கேட்டேன்.

"இரண்டு விரலில் ஒன்னைத் தொடு, உனக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று தெரியும் " என்றான்.

எனக்கோ கடுப்பாகிவிட்டது. ஆனாலும், அவனை பள்ளிக்காலம் முதலே அறிந்தவன் என்பதால், பிடிவாதத்தில் அவனை வெற்றி கொள்ள முடியாது என்றுத் தெரியும். சரி போனால் போகிறது என்று அவன் காட்டிய இரண்டில் ஒன்றை கண்ணை மூடிக் கொண்டு தொட்டேன்.

"சரி. வாடா வெளியே போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்று சொல்லியப்படியே எழுந்தான்.

இரண்டு பேரும்், இயந்திரவண்டியில் அருகே உள்ள சிம்மக்கல் கோனார் மெஸ்க்கு போனோம்.

இரண்டு, கறி தோசை சொல்லிவிட்டு, நாற்காலியில் அமர்ந்தோம். எனக்கோ ஆவல் தாளமுடியவில்லை.

"ம்..சொல்லுடா" என்று எடுத்துக் கொடுத்தேன்.

"இப்ப சொல்லலாமா, அப்பறம் சொல்லலாமா"..என்று கூறியபடியே, இரண்டு விரலை நீட்டினான் முருகேசன்.

"டேய்..உன் விரலை முறிச்சிப் போட்டா, அதற்கப்பறம் நீட்ட மாட்டே" என்று அவன் கையயைப் பிடித்து முறுக்கினேன்

"டேய் விடுடா, சொல்லுறேண்டா, சொல்லுறேண்டா" என்று அலறினான்...பொய்யாக.

"சொல்லு" என்றுச் சொல்லியபடி, தளர்வாக அவன் விரலை பிடித்தேன். மீண்டும் வம்பு செய்தால், அவன் விரலை உடைப்பதற்காக.

"வேற யார்க்கும் சொல்லக் கூடாது" என்று முன்னறிவிப்புடன் என் காதில் கிசு கிசுத்தான்.

அவன் சொன்னதைக் கேட்டவுடன், அடடே இது ரொம்ப நல்லா இருக்கே என்றுத் தோன்றியது.

சாப்பிட்டு முடித்தோம். பின்னர், முருகேசன் என்னை என் வீட்டில் இறக்கிவிட்டு அவன் வீடு நோக்கிச் சென்றான்.

சரி நான் தூங்கப் போறேன்..அப்பாலே பார்ப்போம்.

என்னாது...அவன் இரண்டு விரல் நீட்டின ரகசியம் சொல்லனும்மா..?

அப்ப இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொடுங்க சொல்லுறேன்.



பி.கு :-

இதை வவாசவிற்கு விரல் நீட்டிக் கேட்காமல் அப்படியே எடுத்துக்குவாங்களா..?

Tuesday, April 22, 2008

இரண்டாவது இரண்டு (திரைக்கதை) - வவாச போட்டிக்காக...

வவா சங்கத்துக்கு.... இரண்டு போட்டிக்காக எழுதப்பட்ட சீரியஸ் திரைகதை, கதை படிச்சுட்டு தற்கொலை பண்ணிக் கொண்டால் நான் பொறுப்பு இல்லை.

இயக்குனர் சாமிமலை : சார், இந்த கதையை படமா எடுத்தால் கண்டிப்பாக நூறுநாள் தான்

தயாரிப்பாளர் : எல்லாரும் இதைத் தான்யா முதலில் சொல்றானுங்க

இயக்குனர் சாமிமலை : இது அப்படி இல்லை சார், மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணற கதை இல்லை சார் இது, சேது மாதிரி நிலைச்சு நிக்கிற கதை

தயாரிப்பாளர் : சரி சொல்லய்யா கேட்குறேன்

இயக்குனர் சாமிமலை : முத சீன், அருவியைக் காடுறோம், அப்படியே கீழே இறக்கி அங்கே கதாநாயகி குளிச்சிக்கிட்டு இருக்கிறத காட்டுறோம்... அப்படியே இரண்டு...

தயாரிப்பாளர் : மலையாளப்படம் மாதிரில்லே இருக்கு, ஷகீலா மேடம் இப்ப அந்த மாதிரி படங்களெல்லாம் நடிப்பது இல்லையே

இயக்குனர் சாமிமலை : சார், இது இளமை பொங்கும் படம், கதையை கேளுங்க... அப்படியே இரண்டு புறா அருவி பக்கத்தில் தண்ணீர் குடிப்பதைக் காட்டுறோம்.

தயாரிப்பாளர் : ம் சொல்லு

இயக்குனர் சாமிமலை : அந்த நேரம் பார்த்து அருவியில் தண்ணீர் வேகமாக கொட்டுது

தயாரிப்பாளர் : கதாநாயகி அருவியில் அடிச்சிக்கிட்டு போய்டுவாங்களா ?

இயக்குனர் சாமிமலை : இல்லை சார், அவங்க போட்டு இருக்கிற தாவானி அருவியில் அடிச்சிக்கிட்டு போய்விடுகிறது. செய்வது அறியாது திகச்சி போய் குறுக்கால கையை வச்சு மறச்சிகிறாங்க, இங்கே தான் ஹீரோ எண்டிட்ரி கொடுக்கிறார்.

தயாரிப்பாளர் : ஹீரோ அங்கே எப்படிய்யா திடீர்னு வந்தான்

இயக்குனர் சாமிமலை : போலிஸ் துரத்தி வரும் போது ஹீரோ இந்த பக்கமாக ஓடி வந்து கொண்டிருந்தார். போட்டு இருக்கிற சட்டையை கழட்டி ஹீரோயின் உடம்புல போர்த்திவிட்டு வேகமாக அருவி பாயும் ஆற்றில் குதிச்சிடுறார்.

தயாரிப்பாளர் : அப்பறம்

இயக்குனர் சாமிமலை : தன்னோட மானத்தை காப்பாற்றிய மன்மதன் யார் என்று கதாநாயகி கண்டுபிடிக்க முயலுறாங்க

தயாரிப்பாளர் : இதுதான் கதையா ?

இயக்குனர் சாமிமலை : இது ஒன்லைன் ஸ்டோரி

தயாரிப்பாளர் : ஒன் லைனா ?

இயக்குனர் சாமிமலை : ஆமாம் சார், இது ஒரு பெண், தான் விரும்பும் ஆணை எப்படி அடையாளம் காண்கிறார் என்பதே கதை.

தயாரிப்பாளர் : கடைசியில் கண்டுபிடிச்சாளா ?

இயக்குனர் சாமிமலை : கண்டுபிடிச்சா, ஆனால் அங்கு தான் சஸ்பென்ஸ்

தயாரிப்பாளர் : ம்

இயக்குனர் சாமிமலை : கண்டு பிடிச்சதும் தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன மேட்டர்

தயாரிப்பாளர் : ஐயையோ

இயக்குனர் சாமிமலை : அதோட கதை முடிஞ்சுது, மனதை தேற்றிக் கொண்டு அதே அருவிக்கு வந்து மீண்டும் குளிக்கிறாள், அவள் ஒரு தொடர்கதை மாதிரி இருக்கா ? இங்கே அவள் ஒரு தொடர் குளியல்.

தயாரிப்பாளர் : இந்த கதையில் என்ன மெசேஜ்

இயக்குனர் சாமிமலை : அதெல்லாம் இல்லாமல் கதை இருக்குமா ? "கண்டதும் காதல் ஏமாற்றத்தைத் தரும்" என்று சொல்ல வருகிறோம்

தயாரிப்பாளர் : உன்கிட்ட இன்னொன்னு கேட்கனும் னு நெனச்சேன்,

இயக்குனர் சாமிமலை : சொல்லுங்க சார்

தயாரிப்பாளர் : படத்தோட பேரு ஏன் 'இரண்டாவது இரண்டு' ன்னு வச்சே ?

இயக்குனர் சாமிமலை : சார் ஏற்கனவே மாதவன் நடிப்பில் சுந்தர் சி படம் 'இரண்டுன்னு ஒருபடம் இருக்கு, அதனால் தான் இந்த கதைக்கு இந்த பேரு

தயாரிப்பாளர் : கதைக்கு தலைப்பு ஒட்டலையே ?

இயக்குனர் சாமிமலை : இரண்டு பேரோட மனசும் சேர வழியில்லாமல் இரண்டாகிடுது அதுதான் இரண்டாவது இரண்டு - 'இரண்டாவது இரண்டு மனசு" ன்னு புரிஞ்சிகுவாங்க
ஆடியன்ஸ், ஆடியன்ஸ் புத்திசாலி இல்லையா ?

தயாரிப்பாளர் : யோவ், பல தயாரிப்பாளர்கள் சேதுபட கேரக்டராகவே ஏன் மாறிடுறாங்கங்கிறது என்று இப்பதான்யா புரியுது.

பின்குறிப்பு : இது வவாசவுக்கு போட்ட மொக்கை.

Monday, January 21, 2008

வானொலியில் கேட்ட 'கெட்ட' கதை !

தலைப்பில் தவறு இல்லை. ஒரு கெட்ட கதையை நேற்று சிங்கை வானொலியில் சொன்னார்கள் அதைத்தான் இங்கு எழுதுகிறேன்.

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான், அவன் விறகு வெட்டும் போது கோடாலி தண்ணீரில் விழுந்ததும் அதன் பிறகு தேவதை தோன்று அவன் நல்ல மனதை பாராட்டி தங்கம், வெள்ளி மற்றும் அவனுடைய கோடாலி மூன்றையும் கொடுத்து சென்ற கதையை நேர்மை குறித்த நீதிக் கதையாக சொல்வதை பலரும் கேள்வி பட்டு இருப்போம், இதுவும் அதே போன்று கதைதான். ஆனால் இங்கு ஒரு பெண் குளத்து கரையில் உட்கார்ந்து துணி தைத்துக் கொண்டிருக்கிறாள். ஏன் துணி தைக்க குளத்து கரைக்கு போனால் என்று கேள்வி கேட்கப்படாது.

அவள் தைத்துக் கொண்டிருக்கும் போது ஊசி தவறி போய் குளத்து நீரில் மூழ்கி விடுகிறது. அவளோ ஏழை மாற்று ஊசி கூட இல்லை. கண்ணீர் விட்டாள், கதறினாள், உடனே ஒரு தேவதை தோன்று முதலில் தங்க ஊசியை எடுத்துக் காட்டியதாம், அது இல்லை என்றதும் வெள்ளி ஊசியை எடுத்துக்காட்டியதாம், அதுவும் இல்லை என்றதும் அவளுடைய ஊசியை எடுத்துக்காட்ட, ஆம் என்னுடையது என்றாளாம், அதன் பிறகு மூன்று ஊசியையும் கொடுத்துவிட்டு, அவள் நேர்மையை பாராட்டி மறைந்துவிட்டதாம்.

வேறொருநாள் அதே குளத்தின் வழியாக தன் கணவரை அழைத்துக் கொண்டு வந்தாளாம், அந்த குளத்தில் அழகான தாமரை பூத்திருப்பதைப் பார்த்து கணவரை பறித்து தரச் சொன்னாளாம். அவன் மனைவி கேட்டுவிட்டாளே என்று நீரில் இறங்க, சேறு அப்படியே அவனை உள்ளே இழுத்துக் கொண்டது, வேற வழி தேவதையை எண்ணினாள். மீண்டும் தோன்றியது.

கவலைப்படாதே, உன் கணவனை நான் மீட்டுத்தருகிறேன் என்றது, முதலில் தண்ணீருக்குள் முழுகி ஒருவரை இழுத்து வந்து காட்டியது, அவள் பார்த்தாள் நம்ம தல 'அஜித். பார்த்தவள் உடனடியாக இது என் கணவர் தான் என்றாளாம், தேவதைக்கு கோவம் வந்துவிட்டதாம், அடிப்பாவி உன் நேர்மை கணவன் விசயத்தில் இவ்வளவு தானா ? உண்மையைச் சொல் உன் கணவரை நீ தானே தண்ணீரில் பிடித்து தள்ளியது ? இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று கோபத்துடன் கேட்டது. தேவதையே என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளாய், அஜித் எனது கணவர் இல்லை என்று சொல்லி இருந்தால் அடுத்து விஜயை காட்டி உன் கணவரா என்று கேட்பாய், அதற்கும் இல்லை என்பேன், கடைசியில் என் கணவரை எடுத்துக் கொடுத்துவிட்டு என் நேர்மையைப் பாராட்டி, மூன்று பேரையுமே வைத்துக் கொள் என்பாய். இது எனக்கு தேவையா ? ஒரு ஆளையே சமாளிக்க முடியவில்லை. மூன்றுபேரா ? ஐயோ வேண்டாம் அதற்க்காகத்தான் அஜித் என் கணவர் என்று சொன்னேன் என்றாளாம்.

தேவதை அவளைப் பற்றி கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றிவிட்டு, அவள் கணவரையே மீட்டு கொடுத்து விட்டு, அவளிடம் மன்னிப்பு கேட்டு மறைந்து விட்டதாம்.

*******

அப்பறம் கதையில் நானாக செய்த ஒரு சின்ன திருத்தம், அவர்கள் கதையைச் சொல்லும் போது கமல், ரஜினி என்றார்கள், 50 வயதுக்கும் மேற்பட்டவர்களைவிட இளம் ஹீரோக்களான அஜித், விஜயை குறிப்பிடுவதே சரியாக தோன்றியது.

மெசேஜ் : ஒரே நீதி(க்கதை) அதே போன்ற வேறு சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்காது.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

Monday, December 31, 2007

சிறுகதைச் சிற்பிகள் : முதல் சுற்று வெற்றிக்கு கொண்டாட்டம்

சமீபத்தில் நடந்த சிறுகதைப் போட்டியில், சுண்டெலி முதல் பெருச்சாளி வரை அனைவரும் பங்குப் பெற்றனர். நடந்த இந்தப் போட்டி, பதிவர்களிடையே, ஒரு ஆரோக்கியமான போட்டியயை உருவாக்கியது.

கடும் போட்டி நிலவிய இந்த சூழ்நிலையில்,

குழு "அ" பிரிவில், பெருவாரியான வாக்குகளைப் பெற்று, இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிருக்கியிருக்கும்
ஜெகதீசனுக்கு

எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லி பெருமிதம்/உவகை/பூரிப்பு என்று இன்ன பல விதமான உணர்ச்சிகளை அடைகிறோம்.

குழு "ஆ" பிரிவில், மாற்றான் தோட்டத்து மல்லிகை, கிங்க் ஆப் பிராங்க்ஸ், தங்கத்தின் தங்கம், பித்தளையின் பித்தளை,

குசும்பன்

பெருவாரியான வாக்குகள்ப் பெற்று, இரண்டாம் நிலை அடைந்து, இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிருக்கிறார். அவருக்கும் எங்களது வாழ்த்துக்களைச் சொல்லி, அதே பல பல உணர்ச்சிகளை அடைகிறோம்.

இறுதிச்சுற்றில்,இந்த இரண்டு கண்மணிகளில் எந்த மணி வெற்றிப் பெற்றாலும், எங்களுக்கு மகிழ்ச்சி என்பதை அறிவித்து, இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
இவர்கள் வெற்றியயைக் கொண்டாடும் வண்ணம், இன்று உலகம் முழுவதும் இரவு 12.00 மணிக்கு வாண வேடிக்கைகள் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற அனைவரையும், அவர் அவர் வீட்டு மொட்டை மாடிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு 5 நிமிடம் முன்னரே வந்திருந்து கை தட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, December 27, 2007

சாதிகள் இல்லையடி பாப்பா.....

நகரின் பிரபலமான பள்ளி.. அதன் 50வது ஆண்டு விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.

பள்ளியின் தாளாளர், நகரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர்... அவரே முன்னின்று எல்லாப் பணிகளையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்...

பள்ளியின் கட்டடங்களுக்கு வண்ணம் பூசும் வேலை முடியும் தருவாயில் இருந்தது.

ராமன் பெயர்ப் பலகையைக் கீழே இறக்கி புதிதாக எழுதிக் கொண்டிருந்தான்.. பக்கத்தில் இருந்த வகுப்பில் நடக்கும் பாடங்களைக் கேட்டவாறே...

தமிழாசிரியர் உள்ளே பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்....

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர
என..

இதைக் கேட்டு சிரித்தபடியே பெயர்ப் பலகையில் பள்ளியின் பெயரை எழுதிக் கொண்டிருந்தான் ராமன்.... பள்ளியின் பெயர் "**********களுக்க்குப் பார்த்தியப்பட்ட மேல்நிலைப்பள்ளி"!