இதை நான் என் மனைவிக்கிட்டே சொல்லலாமா..? என்று நான் உங்களை கேட்டால் நீங்கள் சொல்லலாம் என்று சாதரணமாக சொல்லிவிட்டு சென்றுவிடுவீர்கள். அதனால், விளையும் பின் விளைவுகளை நான் அன்றோ சந்திக்க வேண்டும்.
பொதுவாக நான் என் மனைவியிடம் எதையும் மறைத்ததில்லை. அலுவலகத்திலே ஒரு சுற்றுலாவிற்குச் சென்றோம். 3 நாள் இன்பச் சுற்றுலாவாகவேயிருந்தது. ஆனால், முடியும் நாளிலே அது நடந்தது. அது நடக்கும் போது நன்றாகவேயிருந்தது. என் மகிழ்ச்சியிலே நன்பர்களும் பங்கெடுத்து அதற்கு பார்ட்டி கூட கேட்டார்கள். இதற்கு கூடவா பார்ட்டி...என்று நான் சமாளித்து வந்துவிட்டேன்.
என் மனைவி தங்கமானவள். அவள் முகத்தைப் பார்த்தாலே, நான் சடெக்கென்று எல்லா உன்மைகளையும் சொல்லிவிடுவேன்..ஆனால், இன்று வழக்கத்தை மாற்றி தான் ஆக வேண்டும்.
என் நெருங்கிய நன்பன், பாலாஜியிடம் என் சங்கடத்தைச் சொன்னேன். அவன் தான் என் உற்ற தோழன் என்று நிருபித்தான்.
இதை சொல்லுவதும் சொல்லாததும் உன் இஷ்டம்.
நான் இது போல் பல முறை சொல்லாமலே தப்பித்து வந்துள்ளேன்.
ஆனால், இன்று தெரியாமல் நாளை தெரிந்து, மறைத்ததற்காக வேறு மாட்ட வேண்டுமா.. என்று நான் குழம்பித் தான் போனேன்.இப்படி நடக்கும் என்று நான் முன்னரே அறிந்திருந்தாலும், நான் இதைப் பற்றி மூச்சு விட்டதில்லை. எந்த திருமணமான ஆனும், இதைப் பற்றி பேச தயங்குவான்.
நான் மட்டும் என்ன விதிவிலக்கா..?
விட்டிற்குச் சென்றேன்....எப்போதும் போல் அவள் என்னை இன்முகத்துடன் வரவேற்றாள்.
இந்த திருமணமான பெண்களுக்குத் தான் என்ன ஒரு மோப்பச் சக்தி...
"என்னங்க..என்ன ஆச்சு..ஏன்..ஒரு மாதிரியா இருக்கீங்க..."...என்று வினவினாள்.
" ஒன்னும் இல்லையே...நான் நல்லாத் தானே இருக்கேன்." என்று சமாளித்தேன்.
அவள் அதை நம்பவில்லை என்று அவள் கண்கள் சொல்லிற்று.. நான்..அவசரமாக குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தேன்.
அவளிடம் மறைப்பது எனக்குச் சிரமமாகத் தான் இருந்தது. ஏன் என்றால், நடந்ததை நினைத்து எனக்கு மகிழ்சியாகவும் இருந்தகு. அந்த மகிழ்ச்சியயை நான் அவள் இல்லாத போது, கொண்டாடினேன்.
இது நடந்து, மூன்று நாட்கள் கழித்து..
துவைக்கும் இயந்திரத்தில் அவள் துணிகளை துவைக்கப் போட்டுக் கொண்டிருந்தள்..
நான் தொலைக்காட்சியில் ரகசியமாக FTV, பார்த்துக் கொண்டியிருந்தேன்..
ஏதோ உஷ்னக்காற்று என் மிது மோதியது போன்றுயிருந்தது...
திரும்பிப் பார்த்தால் என் ஆசை மனைவி...பத்ரகாளி ஆவதற்கு முந்தைய கட்டத்திலே இருப்பது போன்று எனக்குப் பட்டது..
அவள் கையிலே ஒரு சீட்டு...
இதை நான் எப்படி மறந்தேன்...மாட்டிக் கொண்டா கோழியயைப் போல விழித்தேன்...
நானே சொல்லலாம் என்று தான் இருந்தேன்...
இது என் பெர்ஃபார்மன்ஸ் நன்றாகயிருந்தற்க்காக கொடுக்கப்பட்ட தொகை...அதை சஸ்பென்ஸாக சுற்றுலாவிலே அறிவித்தார்கள்...
தெரிந்தால், நீ உடனே...ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டியிருக்கும் , கல் நெக்லெஸ்க்கு வழி சொல்லிவிடுவாய் என்று எண்ணி மறைத்து விட்டேன்..
இதை வைத்து நான் நம் வீட்டுக் கடனுக்கு ஒரு பெரிய தொகையாக கட்டிவிடலாம் என்று தான் மறைத்துவிட்டேன்...
மனைவி...அதை காதில் வாங்காமல்...பச்சைகலர் கல்லா, சிவப்புக் கல்லா...அது உங்க விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்..என்று சொல்லிக் கொண்டியிருந்தாள்..
Tuesday, December 4, 2007
(நஒக) : மனைவிக்கிட்டே சொல்லலாமா...?
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
Test
டபுள் டெஸ்ட்
ட்ரிப்பிள் டெஸ்ட்
குவாட்ராபிள் டெஸ்ட்
நச்சுன்னு இருக்கு கதை!
Post a Comment