Wednesday, December 5, 2007

காதாலா....?..இது காதாலா...?...- பத்தும் & ஏழூம்

இது இங்கேயிருந்து நகல் செய்யப்பட்டது

10ஆம் வகுப்பிலே புகுந்து, புது வகுப்புத் தலைவனாகவும் ஆன, மகிழ்ச்சியயைக்கூட கொண்டாட முடியாத, ஒரு மனோநிலையிலே அவன் இருந்தான். எட்டாம் வகுப்பு முதல், அவனுக்கென்றே முடிவு செய்யப்பட்ட ( வேற யாரு குடி கெடுக்க வகுப்புக்குத் தான் நிறைய பேர் வரானுங்களே) செய்த பொண்ணை, இன்று வேறு வகுப்பில் இருந்து ஒருவன் வந்து டாவடிக்கின்றான். கண் முன்னே நடைப்பெற்றாலும், அவனால், ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஏன், அவன் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை நான் அறிய, கொஞ்சம் முன் கதை அவசியம். அவன் அப்போது, 7 வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனை நாம் எப்படிச் சொல்லுவது, ரவி என்று நாம் கூப்பிடுவோம். வகுப்பிலே, ஒரு குட்டித் தலைவனாக முயன்றுக்கொண்டிருந்தான் ரவி அப்போது. அவன்
வேலை, வகுப்பிலே, கெட்ட வார்த்தைகளை பேசுதல், சைட் அடிப்பதில் கூட்டனி அமைத்தல் என்று செவ்வனே செய்து வந்தான். ஆனால், எப்போதும் போல முன்வரிசையில் அமர்ந்து, நல்ல பிள்ளையாக பாடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

திடிரென்று வகுப்பு நடக்கும் போது, பின்னால் வரிசையிலே ஒரு குழப்பம். பெண்கள் வரிசையில், அமர்ந்திருந்த மேரிக்கும், சுரியாவுக்கும் ஏதோ தகராறு. சூரியா கையிலே இருந்து, ஒரு தாளை மேரி பலவந்தமாக எடுத்துவிட்டாள். சூரியாவை எல்லோரும், கேள்விக்கனைகளோடு துளைக்க ஆரம்பித்தனர். இடைவேளைக்கு மணி அடித்தவுடன், ஆசிரியயை, இந்த பிரச்சனையயை மறந்து, வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு நடைப்போட்டார்.


ரவி , இதை மறந்துவிட்டு, வழக்கமாக செல்லும், பெட்டிக்கடைக்கு தன் சகபரிவாரங்களுடன் நடைப் போட்டான்.
தான் வைத்திருந்த காசிலே, சில தின்பண்டங்களை வாங்கி, பின் நன்பர்களுக்குள் பகிர்ந்தளித்துவிட்டு, மாதமுமும்மாரி பொழிகிறதா என்று பள்ளியயைச் சுற்றி வந்து விட்டு, அடுத்த வகுப்பு ஆரம்பிக்க 5 நிமிடங்களுக்கும் முன் வந்தான்.

அவனுடைய சக மாணாக்கர்கள் அவனை பார்த்து, புன் முறுவல பூத்தனர். அவனும், சிறு நகை ஒன்றை தந்துவிட்டு நகல முயல, பின் வரிசையில் உள்ள அனைவருமே விசமத்தனமாக சிரிப்பதைக் கண்டு, அவனுக்கு மன்டையிலே விளக்கெரிந்தது.


என்னடா...என்ன விசயம் என்று கேட்டான்.

அவர்கள் எல்லோரும், பெண்கள் வரிசையயை பார்த்து சிரித்துவிட்டு, இவனைப் பார்த்து மீண்டும் சிரித்துக் கொண்டே, ஒன்றும் இல்லை என்றனர்.

டேய் என்று சில கெட்ட வார்த்தைகளை விட்டுப் பார்த்தான்...ஒருவரும் சொல்லவில்லை...அதற்குள் ஆசிரியர் வந்து விட...பாடத்திலே, மணம் ஈடுபாடுக் காட்டவே இல்லை. அவனின், உளவுப்பிரிவு வகையறாவான, இட்லியயை..(பெயர்க் காரணம் சுவாரசியமானது பின்னர் அறிமுகப்படுத்துகிறேன் ஒவ்வொருவராக), பின் வரிசையில் அமரப் பணித்தான். இட்லி சாதரணமாக செல்ல மாட்டான். ஆனால், இன்று அவனுக்கும், ஆரவம் தாளவில்லை. இசைவு தெரிவித்து, ஆசிரியர் பாரத போது, பின்வரிசைக்குச் சென்றான்.

அவன் போன சில நிமிடங்களிலேயே, அவனும், சிரிக்க ஆரம்பித்தான். ரவிக்கோ, இருப்புக்கொள்ளவில்லை. தானாய் போய் அங்கே அமர தன்மானம் இடம் கொடுக்க வில்லை..போனாலும், சொல்லாமல், ஓட்டவே முயல்வார்கள். அது தன் இமேஜுக்கு இழுக்கு என்று கருதி காத்திருக்கலானான்.
அவனின் தவிப்பை சற்று ரசித்து விட்டு (என்னையை எப்படி எல்லாம்..இட்லின்னு ஓட்டியிருப்பே..என்று சொல்லிக்கொண்டே) , சரி போதும், இதுக்கு மேல் என்றால், நமக்கு பிரச்சனை என்றால் கூட வர ஆள் வேண்டும் என்று, வருங்காலத்தைக் கருதி, அவன், ரவி அருகிலே அமர்ந்தன்.

என்ன என்பது போல் ரவி, இட்லியயைப் பார்த்தான்..(இட்லியின் பேரும் ரவிதான். இன்ஷியல் வேற...).
இட்லி, நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, சூரியா கைப்பற்றிய தாளுக்கும், மேரி பலவந்தமாகா பிடிங்கியதற்கும், ரவியயைப் பார்த்து சிரித்தற்கும் ஆன காரணத்தை விளக்கினான்.

விவரத்தை கேள்விப் பட்ட ரவிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர், மெதுவாக திரும்பி, பெண்கள் வரிசையயைப் பார்த்தான். அதைக் கண்டதும் பெண்கள் வரிசையிலே சல சலப்பு, சிரிப்பு..ஹே...தெரிஞ்சிருச்சிடி.

அவன் மற்ற நன்பர்கள் அவனிடம் என்ன என்னவென்று கேட்க...எதுவும் சொல்லாமல், சிறிதளவு, வெட்கப்பட்டுக் கொண்டே, ஒன்னுமில்லை என்றபடி. பொய்யாக பாடம் கவனிக்க ஆரம்பித்தான்.

அப்படி என்ன தான் இருந்தது அந்த தாளிலே...

அவசரமா...அடுத்த அத்தியாத்திலே சொல்லுறேன்..

- வளரும்..

0 Comments: