Tuesday, December 11, 2007

நீ அவனே தான்...!

மாடல் அழகியாக ஆகி இருக்க வேண்டியது, நடக்கல. ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது, பேருந்தில் செல்லவும் பிடிக்காது என்ன செய்வது, இன்னும் டிரைவிங் கற்றுக் கொள்ளவில்லை, எனவே ஆட்டோவில் தான் அலுவலகம் சென்று வந்தாள் ரிஷிகா அதனால் எந்த விளம்பர பட இயக்குனரின் கண்களிலும் இவள் கண்கள் பட்டுவிடவில்லை. அதனால் முதல்வரியை திரும்ப படிங்க.

கன்னிகா அது போல் இல்லாவிட்டாலும் அழகிய இதழ்கள், எள்ளுப்பூ நாசி ( யப்பா அடிக்க வர்றாதீங்க) பார்பதற்கு சுமாராக இருந்தாலும் சூப்பர் அழகியாகத்தான் தன்னை நினைத்துக் கொள்வாள். இரண்டு பேரும் ஒரே அலுவலகம் தான். ஒருவருக்கொருவர் ஓரளவு பொறாமை இருப்பது அவர்கள் சொல்லாடலில் தெரியும், நீ வா போ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு ஓரளவு தோழிகள் தான்.

"ஹேவ் யூ சீன் பருத்தி வீரன்" - ரிஷிகாவிடம் கன்னிகா கேட்டாள்

"ஓ நோ ஐடோண்ட் லைக் தமிழ் மூவி..." - ரிஷிகா

"தென்.." - கன்னிகா

"எய்தர் இங்கிலீஸ் ஆர் ஹிந்தி மூவி"

போரடித்ததோ என்னவோ தமிழுக்கு தாவினார்கள்

'ரொம்பதான் அலடிக்காதே...தமிழ்படங்கள் கூட அருமையாகத்தான் இருக்கு...'

'...பச்...இருக்கட்டுமே...எனக்கு பிடிக்கலை..."

அவளை எதாவது வாரிவிடவேண்டும்...என்பதற்காகவே கன்னிகா...

'மூன்று நாட்களுக்குள் சிகப்பழகா ...?"

உடனை மேசை டிராயரைத் திறந்து கைப்பையில் இருந்த கண்ணாடியை எடுத்து முகம் பார்த்துவிட்டு

முகத்தைப் பார்த்து...மேக்கப் சரிசெய்து கொண்டாள்.. முறைத்துவிட்டு

'நீ கூடத்தான் ரத்தம் குடித்தது போல் லிப்டிக் போட்டுட்டு வந்திருக்கே...'

'ஓகே...ஓகே....'

இருவரும் சமாதானம் ஆனார்கள்.

'ஏய்ய்...ரிஷிகா அங்க பார்ரேன்...'

'என்னது ?'

'நாம பேசுறதை தலையை சாய்ச்சு வச்சி ஒட்டுக் கேட்டுகிட்டு இருக்கிறதை...'

'என்னது யார் ? ...கேட்டா என்ன ?'

'வேறு யார் மங்களூர் சிவாதான்...அவன் கேட்டுட்டு சும்மா இருப்பானா ?'

'என்ன செய்வானாம்...'

'ப்ளாகில போய் ...நாம இரண்டு பேரும் அவனை சுத்தி சுத்தி வர்றதாவும்...அவனை நெனச்சி கனவு காணுறதாவும் மாற்றிச் சொல்லுவாண்டி'

'ஓ அப்படியா சங்கதி..அப்ப இரு ஒண்ணு பண்ணுவோம்...'

மேசையின் மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து...

சிவாவின் டேபிளுக்கு சென்றாள்

வழக்கம் போல் தூங்குவது போல் பாசாங்குடன் இருக்கிறான் என்று நினைத்து... தலையில் ஊற்றினாள்

நிஜமாகவே தூங்கி இருப்பான் போல...திடுக்கிட்டு எழுந்து

முதலில் கோபமானாலும், பின்பு அசடு வழிந்து

'நேற்று 2 மணி வரை அலுவலகத்தில் ஆணி புடுங்கினேன்...அதுதான் நிஜமாகவே தூங்கிட்டேன்'

'சாரி...சிவா....ஒரு பாட்டில் தண்ணீர் வேஸ்ட் ஆகிட்டுதே...' என்றால் ரிஷிகா

கன்னிகாவும் அவள் பங்குக்கு,
'சிவா நீ தூக்கத்தை கண்டினியு பண்ணு...இல்லாட்டி நாளைக்கு ப்ளாக்குக்கு கதை கிடைக்காது'

இவன் திருந்த மாட்டாண்டி நாம இடத்துக்கு போகலாம்...இருவரும் சிரித்துவிட்டு அங்கிருந்து நகன்றனர்

தூக்கம் கலைந்துவிட்டது, இனி என்ன செய்வது

கனனியைத் திறந்து .... இண்டர் நெட் எக்ஸ்ப்ளோரரில் www.blogger.com என்று தட்டச்சினான் சிவா.

_________________________________________________
இந்த கதை நண்பர் மங்களூர் சிவாவுக்கு அர்பணம்.

கும்முறவங்க கும்முங்க

2 Comments:

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

give me more!!!!

said...

//
இந்த கதை நண்பர் மங்களூர் சிவாவுக்கு அர்பணம்.

கும்முறவங்க கும்முங்க
//
ரிப்பீட்டேய்ய்ய்