ஜெகதீசன் புவனா தம்பதிகள், மிகுந்த கவலையுடன் மருத்துவர் முன்பு உட்கார்ந்திருந்தார்கள்,
அவர்களின் செல்லக்குட்டி ஐஸ்வரியா அவர்கள் முகத்தைப் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.
எற்கனவே வீட்டில் ஆண் ஓன்று பெண் ஒன்று என இரண்டு.. இருக்கு இப்போது ஸ்கேன் பண்ணிப் பார்த்தால்
வயிற்றில் மூன்று இருப்பதாக சொல்கிறார்.
"டாக்டர்..இதை எப்படியாவது ..."
"இதுக்கு மேல் பேசாதிங்க...அதெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது""
கணவனைப் பார்த்தாள் புவனா,
அவனும் உதட்டைப் பிதுக்கினான்
மருத்துவ மனையை விட்டு வெளியில் வந்தார்கள்
"இரண்டு போதுங்க..."
"ஆமாம் புவனா...நம்ம வருமானம் இதுக்கு மேல் வளர்க்க கட்டுப்படியாகாது..."
"என்னதான் செய்றது..எங்காவது குப்பைத் தொட்டியில்..."
அவள் வாயைப் பொத்தினான்,
"கஷ்டமாகத்தான் இருக்கு...இருந்தாலும் யோசனைப்பண்ணிப் பார்த்தேன்..."
"சொல்லுங்க..."
"நம்ம அரவிந்த்...இருக்கானே...என்னோட ப்ரெண்ட்...அவனுக்கு தத்து கொடுத்துடலாமா ..."
"நல்ல யோசனையாக இருக்கு...அப்படியே உங்க நண்பர்கள் யாரும் கேட்டால் கொடுத்துடலாம்...தெரிஞ்ச எடத்தில் கொடுத்தால் தான் நாம அவ்வப்போது சென்று பார்த்து மகிழலாம்"
என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்கள் காலை நக்கியதும், தூரத்தில் ஒரு நாயின் குறைப்பைக் கேட்டு பலமான குரைப்பாக "லொள்" என்றது மீண்டும் மூன்று குட்டிகளுக்கு தாயாகப் போகும் ஐஸ்வரியா.
பின்குறிப்பு : இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் பாட்டில், தண்ணீர் டம்ளர், பூஜை அறை அனைத்தும் கற்பனையே...குறிபிட்டுள்ள சம்பவங்கள் குண்டுவெடிப்பையோ , தீபாவளியையோ குறித்ததல்ல.
Sunday, December 16, 2007
நஒக : தத்து ( போட்டிக்கு அல்ல...பொறாமைக்கு..)
Posted by கோவி.கண்ணன் at 7:53 PM
Labels: கோவி.கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
:))
//
( போட்டிக்கு அல்ல...பொறாமைக்கு..)
//
என்ன பொறாமை சார் உங்களுக்கு... யார்மேல பொறாமை???
:)
Post a Comment