முதல் பாகம் : காதாலா....?..இது காதாலா...?...- பத்தும் & ஏழூம்
இட்லி ரவி, இடதுபுறமும், ரவி அவனுக்கு அருகிலேயும், கன்னாடி பாலு, அடுத்ததாகவும், அவனுக்கு அடுத்து ஆந்தை ராஜுவும் அமர்ந்திருந்தனர். இவர்களில், ரவி சற்றே, பெரிய ஆளாக நடக்க முயற்சிப்பதால், அவர்களும் அதை ஏற்று, ரவியின் அணியில் இருந்து வந்தனர்.
என்ன நடந்தது என்று தெரியாமல், மண்டையயை பிறாண்டிக்கொண்டிருந்தான், கன்னாடி பாலு. ஆர்வம் தாளாமல், சற்றே பின் நகர்ந்து, கையயை பின்னால், விட்டு, இட்லி ரவியின் மண்டையிலே ஒரு தட்டு தட்டினான். இட்லி ரவி, கோவமாக பின்னால் திரும்பி, எவன்டா அது என்ற ஒரு பார்வையயை வீசத் தயாரானப் போது, பாலு பின்னால் தள்ளி அமர்ந்திருப்பைதைப் பார்த்து, என்னடா என்றான் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே...
அவனுக்குத் தெரியாதா அவன் எதுக்காக கூப்பிட்டான் என்று...
னொன்னாடா...சொல்லுடா, என்ன விசயமின்னு...
கொஞ்ச நேரம் அவன் பிகு பன்னுவதும், இவன் கிள்ளுவதுமாக நேரம் கடந்தது. சுவாரசியமாக தூங்க முயற்சித்துக் கொண்டிருந்த, ஆந்தைக்கு எதோ நடக்குது என்று புரிந்து, அவனும் ஆட்டையிலே கலந்துப் பின்பு, இ.ரவியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
சொல்லுறேன்டா என்று சொல்லிவிட்டு...மிஸுப் போனதும் சொல்லுறேன் என்று கொஞ்ச நேரம் அவர்களின் தவிப்பை ரசித்தான்.
ஆசிரியர், வகுப்பை விட்டு நகர்ந்ததும், ரவி,ஓரத்துக்கு தள்ளப்பட்டு, இ.ரவி, உள்ளே இழுக்கப்பட்டான். அவன் மெதுவாக " டேய்..அது வேற ஒன்னுமில்லடா, நம்ம கிளாஸ் பொன்னுங்க, நோட்ல, FளாMஏஸ் போட்டு விளாயாடியிருக்காங்க..அதுல நம்ம ரவி பேரையும், புதுசா வந்திருக்கே அந்தப் பொண்ணு பேரையும் போட்டு பாத்திருக்காங்க...அதை நம்ம சூரியா பாத்துட்டான்...வேகமா அந்தப் பக்கத்தை கிழிச்சி எடுத்துட்டான்...அதை அந்த ரவுடி மேரி மறுபடியும் பிடுங்கிட்டாளாம்.."
பாலு..இவன் ரொம்ப விவரமானவன்..."டேய் யார் எழுதினாடா, ரவி பேரை...அந்தப் பொண்ணா, ரவுடி மேரியா, உன் பேரும் ரவி தானே..அதெப்படி இவன் தான்னு சொல்லுறே"
ரவியும் ஆர்வமாக, அது தானே...நான் இதை கவனிக்கவே இல்லையே...என்று மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டு..அமைதியாக காதுகளை கூர்மையாக்கிக் கொண்டான்..
இ.ரவி..." டேய்...அதுல இவன் இன்ஷியல் இருந்ததாம்டா...கையெழுத்து மேரியோடது தான்டா"..
ஆந்தை அதற்கு.." டேய்..யார் எழுதினா என்ன..எழுதும் போது அந்தப் பொண்ணு, ஒன்னும் சொல்லையின்னா என்ன அரத்தம்" என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தான்
ரவி..உடனே...சும்மாயிருங்கடா...நீங்க வேற ஏதையாச்சும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்லிவிட்டு. ஆந்தையை பார்ப்பது போல்...பின்னால் கண்களை திருப்பி, முதல் முறை பார்பவன் போல், அங்கிருந்த புதுப் பொண்ணைப் பார்த்தான்.
தாள் கைப்பற்றப்பட்டதால், விவரம் மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று அமைதியாகி விட்ட, பெண்கள் அணி, சுவாரசியமாக, இடைவேளையில் வாங்கிய மிட்டாய், நெல்லிக்கனியயை பிரித்து மேய்ந்துக் கொண்டிருந்தனர்.
அவள் பார்க்காதிருக்க வேண்டுமே என்று ரவி நினைத்ததாலோ என்னமோ...ரவி பார்ப்பதை அவள் பார்க்கவில்லை...திடிரென்று அவள் ரொம்ப அழகானது போல் அவனுக்கு ஒரு உணர்வு. இத்தனை நாள் இவள் எனக்கு போட்டி என்று அல்லாவா நினைத்து வந்தேன். இவளுக்கு என் மேல் ஒரு ஈர்ப்பா...என்று எண்ணியபடி அவர்கள் முதலிலே சண்டையிட்ட நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தான். அதற்குள் வாத்தியார் வந்து விட, அவசரமாக முன் திரும்பி பாடத்தை கவணிக்க முற்பட்டான்.
சில மணி நேரங்களிலே, அதை அவன் மறந்து, வழக்கமான அவர்களுக்குள் விளையாடும், விளையாட்டுக்களான், கால் மிதி, கிள்ளுவது போன்ற விளையாட்டை விளாயடிக்கொண்டு, 4.20 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினான்.
அடுத்த நாள், பள்ளி, பேருந்திலே வரும் போது, மெதுவாக பாலூ, ஆரம்பித்தான்.."என்னாடா சரியா தூங்கலையா..கண் எல்லாம் சிவந்துப் போயிருக்கு.."..
இ.ரவி, மற்றும் ஆந்தையின் வீடு, பள்ளிக்கு அருகிலேயிருப்பதால், அவர்கள் பேருந்திலே வர மாட்டார்கள். அதனாலே, பாலு கூட்டனி இல்லாத காரணத்தினாலெ...ஓட்டுவதை நிறுத்திவிட்டு, பேருந்திலே, கதவை திறந்து மூடும் சீரிய பணியயை செய்ய ரவிக்கு தன்னால் ஆன, உதவியயை செய்ய ஆரம்பித்தான். பள்ளிச் சிறுவர்கள் பேருந்திலே, கதவு திறந்து மூடுவது என்பது, பெரிய வேலை. அதை செய்ய போட்ட போட்டி, காட்ட குஸ்தியெல்லாம் நடக்கும். ரவி 6ம் வகுப்பு வந்திலேயிருந்து, அவன் தான் அதை செய்து வருகிறான்.
பாலு, ரவி கதவை திறக்கும் போது, மிதி வண்டியோ, இல்லை இரு சக்கர வாகனமோ வருகிறதா என்று பார்த்து, சமிக்ஞை கொடுப்பான். ஒவ்வொரு நிறுத்ததிலேயும் அவர்கள் இருவருமே, இறங்கி, ஏறுவார்கள். பேருந்திலே, இதுகென்று இருப்பவர், முன்னிறுக்கையிலே, அமர்ந்து, ஓட்டுனரடுன் சுவாரசியமாக பேசிக் கொண்டு வருவார். பேருந்துல் ரவி ஒரு நாள் வரவில்லை என்றாலும், அவருக்கு வேலை வந்து விடும். ஒரு அலுப்போ , சலிப்போ இல்லாமல் ரவியும், பாலுவும், பார்ப்பதிலே அவர்க்கு வேலை சுலபமாகிவிட்டது.
பள்ளிக்கு அவன் வரும் போது, தான் கவனித்தான், அவர்கள் வரும் போது, வகுப்பிலே அந்தப் பெண்ணை தவிர வேறு யாருமே இல்லை. அவள் எப்படி வகுப்பிற்கு வருகிறாள் என்று நினைத்துப் பார்த்தன. சைக்கிள் ரிக்ஷாவிலேப் பார்த்தது போல் ஞாபகம்..பாலுவிடம்...கேட்டான்..டேய்..இவ எப்படிடா வரா...வீடு எங்கே என்று...
அந்நேரம்ப் பார்த்தா, ஆந்தையும், இ.ரவியும் வர வேண்டும்...
ஆரம்பம் ஆனது, ஒரு சகாப்தம்...ரவி முதலில் அவர்களை கடிந்துக் கொண்டன்..விடையயை தெரிந்துக் கொள்வதிலே, தான் அவனுக்கு ஆர்வம். ஆந்தை தேவையான தகவலைச் சொன்னான். அவள் தினமும், 7.45 மணிக்கே தன் வீட்டைக் கடந்து, பள்ளிக்குச் செல்வாள் என்ற அறிய தகவலையும் சொன்னான்.
ரவி, இயல்பாகவே, சுமாராக படிப்பவன். ஆனால், எல்லா பாடத்திலேயும் தேர்வு ஆகிவிடுவான். அவன் நன்பர்களிடம் , அவனுகு நல்ல பெயர் இருப்பதற்கான காரணத்திலே இதுவும் ஒன்று. ஆனால், இப்போது எல்லாம், அவனுக்கு பாடத்திலே, மனம் லயிப்பதில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பெருமிதம்..தன்னை ஒரு பெண் விரும்புகிறாள் என்ற நினைப்பிலே மிதக்க ஆரம்பித்தான்..
போதக்குறைக்கு, நன்பர்கள் ஒன்றுச் சேர்ந்தாலே, அவன் தலையயை உருட்ட ஆரம்பித்தார்கள். மெதுவாக அது வகுப்புக்குள்ளே பரவி..எல்லா மாணவர்களுக்கும் அது தெரிந்தது.
அன்று இ.ரவி வரவில்லை...உடம்புக்கு சுகமில்லை என்ற தகவல் அவன் தங்கை மூலமாக வந்து சேர்ந்தது. சரி.இன்று வசதியாக உட்காரலாம் என்று எண்ணும் போது, லால் காந்த் அவன் அருகில் வந்தமர்ந்தன். அவன் கூட ரவியின் வீட்டருகே இருப்பவன் தான். பலமான, நட்பு இல்லை என்றாலும், இது வரை சன்டையிட்டதில்லை.
வந்தமர்ந்தவுடனே...என்ன ஹீரோ என்றான்...ரவி நிமிர்ந்து உட்கார்ந்தான்.....உடனே தன் நட்பு வட்டத்தில், ஒரு பத்தடி அருகே அவனை விட்டான். லால் மெதவாக மத்தியானம் பேச்சை ஆரம்பித்தான். உன்னை அவள் லவ் பண்ணுறாளாமே..
ரவிக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை....அப்படியெல்லாம்..இல்லை...என்று மறுத்தான்..
லால்..அதற்கு.."டேய் எல்லாம் எனக்குத் தெரியும்..அந்த தாளிலேயிருந்த விவரம்..எல்லா தெரியும்...லவ் இல்லமலா அதை எழுதியிருப்பா.."
ரவி...அவனின் விளக்கத்தை மண்டையிலே ஏற்றிக் கொண்டான்.
அப்படியே பேச்சை மாற்றி, பொழுதைக் கழித்தான். இப்போதெல்லாம்..இடைவேளையில் சீக்கிரம் வகுப்பிற்குத் திரும்பவே நினைக்கிறான். நன்பர்களும் , பொழுது போக்க இவன் ஒருவன் மாட்டினான் என்று, நின்றால் மரம், நிமிர்ந்தல் கோபுரம் என்று புகழ் பாடி, ஓட்டி ஜாலியாக பொழுதைக் கழிக்கத் தொடங்கினார்கள்.
நாட்கள் ஓடின, இரண்டு வாரம் கழிந்தது..
கன்னாடி பாலு அப்போது தான் தூங்கிக் கொண்டியிருந்தான்..யாரோ, கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, முழித்தான்...
"டேய் பாலு...யாருன்னு பாருடா" என்று பாலுவின் அம்மா சமையலறையில் இருந்தபடி முழங்கினாள்..
அதிகாலை 7.00 மனிக்கே எவன்டா அது...என்று முனங்கியபடி...டேய் பேப்பர் காரா..அடுத்த வாரம் வாடா இன்னைகு அப்பா இல்ல...என்றபடி கதவைத் திறந்தான்...அதிர்ந்தான்...
பாலு ஏன்..அதிர்ந்தான்...?
-வளரும்